சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றவும் – வெங்கடேசன் எம்.பி

public

சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குநருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும். 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வு வருகிற சூழல் எழுந்திருப்பதைச் சுட்டிக்காட்டி தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குநருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14ஆம் தேதி அன்று ரம்ஜான் விடுமுறை அறிவித்துள்ளன.

ஆனால், ரம்ஜான் பண்டிகை, பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரம்ஜான் பண்டிகை திருநாள் தேதி ஒருநாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கில்கொள்ளாமல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15ஆம் தேதிகளில் அறிவித்துள்ளது.

ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்பந்திப்பது சிபிஎஸ்இக்கு அழகல்ல எனச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *