ரிலாக்ஸ் டைம்: பூசணி பாயசம்


நம் நாட்டில் பெரும்பாலும் கண் திருஷ்டிக்காகவும், சில நாடுகளில் கலை பொருட்களுக்காகவும் பயன்படுத்தப்படும் பூசணிக்காய், சிலரது வீடுகளில் மட்டும் கறி சமைக்கவும், ரசம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இந்தப் பூசணியில் ரிலாக்ஸ் டைமில் பாயசமும் செய்து பருகலாம். புத்துணர்ச்சி பெறலாம்.
எப்படிச் செய்வது?
ஒரு கப் பூசணிக்காய் துருவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். ஒரு கப் தேங்காய் துருவலை பிழிந்து பால் எடுக்கவும். கடாயில் பூசணித் துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி, மூன்று கப் பால், தேங்காய்ப் பால் சேர்த்து வேக விடவும். சுண்டக்காய்ந்ததும், கொஞ்சம் பாலில் இரண்டு சிட்டிகை கேசரி பவுடரைக் கலந்து, அதையும் கடாயில் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும் இறக்கவும். சூடாக இருக்கும்போதே ஒரு கப் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை நன்றாகக் கலக்கி, நெய்யில் வறுத்த பத்து முந்திரிப் பருப்பு, நசுக்கிய ஐந்து ஏலக்காய்த்துண்டுகள், ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்தால் பூசணி பாயசம் ரெடி!
சிறப்பு