மனத்தையும் உடலையும் மந்தமாக்கும் பருவ நிலையில், நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படுத்த கூடிய உணவுகளில் உருண்டை வகைகளுக்கும் இடமுண்டு. ரிலாக்ஸ் டைமில் சாப்பிடக்கூடிய இந்த கேரட் கோலா உருண்டை, புத்துணர்ச்சித் தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
**எப்படிச் செய்வது?**
கால் கிலோ கேரட்டைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். மிக்ஸியில் கேரட் துண்டுகள், பொட்டுக்கடலை 100 கிராம், உரித்த சின்ன வெங்காயம் ஆறு, சோம்பு ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் இரண்டு சிட்டிகை, உப்பு தேவையானவற்றை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விடாமல் அரைக்கவும். பின்னர் கலவையை சிறிய அளவில் தட்டவும் அல்லது உருட்டவும். பின்னர் இவற்றை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கலாம் அல்லது எண்ணெயில் போட்டு பொரித்தும் பரிமாறலாம்.
**சிறப்பு**
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.�,