எளிதாகக் கிடைக்கும் பாரம்பர்ய பொருள்களை வைத்து, சுலபமாக சமைத்துவிடக்கூடிய சில உணவுகள் உங்கள் சுவை அரும்புகளை நிச்சயம் மலரச் செய்யும். அவற்றில் ஒன்று இந்தப் பொரி அரிசி மாவு உருண்டை. வீட்டுக்குள்ளேயே வலம்வரும் குழந்தைகளுக்கு ஏற்றது. ரிலாக்ஸ் டைமில் செய்து கொடுத்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.
**எப்படிச் செய்வது?**
200 கிராம் இட்லி அரிசியை வாணலியில் நன்கு சிவக்க வறுத்து அரைத்துவைக்கவும். பிறகு 150 கிராம் வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு அதில் வறுத்துப்பொடித்த இட்லி அரிசி மாவைப் போட்டு நன்கு கிளறி உதிர் உதிராக வரும் பதத்தில் இறக்கி இதில் தட்டிய இரண்டு ஏலக்காய், நெய்யில் வறுத்த 15 முந்திரி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் சேர்த்துக் கிளறி சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைத்தால், அருமையான பொரி அரிசி மாவு உருண்டை தயார். விருப்பப்பட்டால் தேங்காய்த்துருவலை லேசாக வறுத்து முந்திரி சேர்க்கும்போது இதையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம். வறுத்துப் பொடிக்கும்போது சிறிதளவு உப்பு சேர்த்தும் பொடிக்கலாம்.
**சிறப்பு**
இது கார்போ-ஹைட்ரேட்டும் இரும்புச்சத்தும் நிரம்பிய சிறந்த பாரம்பர்யமிக்க ரிலாக்ஸ் டைம் டிஷ்.�,