uகெயில் அதிரடி: பெங்களூரை வீழ்த்திய பஞ்சாப்!

public

கிறிஸ் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நேற்று இரவு (அக்டோபர் 15) நடைபெற்றது. பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினர்.

தேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார்.

பெங்களூரு அணி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19ஆவது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ராகுலுடன் நேற்றைய போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர். இறுதிக் கட்டத்தில் 53 ரன் எடுத்த நிலையில் கெயில் அவுட்டானார். முடிவில், ஆட்டத்தின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறு தோல்விகளால் துவண்டு போயிருந்த பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றியாகும் இது. முதலாவது வெற்றியும் இதே பெங்களூருவுக்கு எதிராகத்தான் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *