எஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகனின் காலணிகளை எடுத்துத் தந்த விஜய்

public

மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் உடலுக்குத் தளபதி விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இறுதிச் சடங்கின் போது, ரசிகர் ஒருவரின் செருப்பை விஜய் எடுத்துக் கொடுத்ததும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை அணிவகுப்புடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபியின் இறுதிச்சடங்கில் ரசிகர்கள், உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

இந்நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்த நடிகர் விஜய், எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் தெரிவித்து, எஸ்பிபியின் காலை தொட்டு வணங்கி அஞ்சலி செலுத்தினார்.

Actor @actorvijay paid Homage to #SPB sir #ThalapathyVijay pic.twitter.com/ONffwhscnx

— Sathish (@prosathish) September 26, 2020

விஜய் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது முதல் அவர் மீண்டும் காரில் ஏறிச் சென்றது முதல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனை #thalapathivijay என்ற ஹேஷ் டேக் மூலம் அவரது ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர். சற்று நேரத்தில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.

அதோடு விஜய்யின் இந்த செயல் கூடுதல் மரியாதையை ஏற்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் படத்தின் இணை இயக்குநருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரவல் காரணமாக, அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் பிரபலங்கள் யாரும் எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். ஆனால் தளபதி விஜய் கலந்து கொண்ட பிறகுதான் அது தனிப்பட்ட விருப்பம் என்பது தெரிகிறது. இவர் மீது மரியாதை அதிகரிக்கிறது. இசை உலகின் முடிசூடா மன்னனுக்கு இப்படி ஒரு மரியாதை கொடுப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி சரணுக்கு விஜய் ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, இரு கரங்களையும் கூப்பி இருக்கும் எமோஜியை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி எஸ்பிபி-ஐ காண ஓடிவந்த விஜய்யை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது கீழே விழுந்த ரசிகர் ஒருவரின் காலணியை விஜய் தாமாக முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் மற்ற நடிகர்களைப் போலவே விஜய்க்கும் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். அதோடு விஜய் – சிம்ரன் கூட்டணியில் வெளியாகி வெற்றி நடை போட்ட பிரியமானவளே படத்தில் விஜய்க்கு அப்பாவாக எஸ்பிபி நடித்திருப்பார். அப்பா மகன் உறவு போல் அல்லாமல் அப்படத்தில் இருவரது உறவும் நண்பர்கள் போன்று பிரதிபலித்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *