திரைத் துறையில் முன்னணி பாடகராக வலம் வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், 40 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து, எஸ்பிபியின் மகனான எஸ்பிபி சரண் தகவல் தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) எஸ்பிபி சரண் வெளியிட்ட தகவலில், அப்பாவின் உடல்நிலை முன்னேறி வருகிறது. எக்மோ, வெண்டிலேட்டர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை தொடர்கிறது. அவர் மருத்துவமனையை விட்டு வீடு திரும்புவதற்கு ஆர்வமாக உள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. திடீரென அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக எஸ்பிபி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
**-பிரியா**�,