குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். இன்றைய நாகரிக உலகில் பனீர் பெரும்பாலானவர்களின் இல்லங்களைச் சென்றடைந்துவிட்டது. நீங்களும் பனீரைக்கொண்டு இந்த பனீர் கீர் செய்து கொடுத்து ரிலாக்ஸ் டைமை ஹெல்த்தி டைமாக்கலாம்.
**எப்படிச் செய்வது?**
அடிகனமான வாணலியில் அரை லிட்டர் பால் சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை காய்ச்சவும். பின்னர் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாலைச் சற்று ஆறவைத்து துருவிய பனீர் ஒரு கப், பொடித்த முந்திரி, பாதாம் கால் கப் சேர்த்து, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து இரண்டு டீஸ்பூன் சாரைப்பருப்பு தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
**சிறப்பு**
புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள பனீர், உடலுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும்.�,