தமிழகத்தில் இன்று புதிதாக 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிவிப்பில், 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 9,62,935 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 4,176 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,91,839 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 58,097பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 29 பேர் உட்பட இதுவரை 12,999 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 2564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5423 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
**-பிரியா**
�,