�
இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, மக்கள் பிரச்சினைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நிலைப்பாடுகள், திட்டங்கள் பற்றி பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் உரையாற்றி வருகிறார்.
தற்போதைய விவாதப் பொருளான வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தே ஜெயரஞ்சன் இன்று (செப்டம்பர் 20) பேசினார். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விவசாயி விற்பனை செய்யலாம் என்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் விளைவிப்பவன் பஞ்சாபிற்கா கொண்டு சென்று விற்க முடியும், ஒட்டன்சத்திரத்திற்கு தானே செல்ல முடியும் என்றவர், பண்டமாற்று முறை குறித்து விளக்கினார். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே விவசாய சட்டங்கள் மாற்றப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார்.
விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காகவே இந்த சட்டங்கள் என சொல்லப்படுவதாகக் குறிப்பிட்ட ஜெயரஞ்சன், ஏற்கனவே இருந்த சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மைதான் செய்தன என்றும் தெரிவித்தார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”