கோவை மாநகர் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை கோவையில் ஒரு கோவில் வாசலில் தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கோவை உக்கடம் டவுன் ஹால் ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இன்று காலை அப்பகுதி வாசிகள் கோவிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கோவில் வாசல் பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதனால் கோயில் வாசலில் இருக்கும் கட்டக் கூரை எரிந்து கரிபடிந்து காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்று காலை உக்கடம் போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்பகுதி வாசிகள், “யார் இந்த செயலைச் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் சமூகத்தில் அமைதி இருக்கக் கூடாது என்பதற்காகவே இதெல்லாம் செய்கிறார்கள். போலீஸார் இதை முளையிலேயே முறியடிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
**-வேந்தன்**�,