தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளிலிருந்தும், டெல்லி, பிகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்தும் வந்த 68 பேர் உட்பட மொத்தம் 4,496 பேருக்கு வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று 5,000 பேர் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 68 பேர் உட்பட இதுவரை 2,167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 340 ஆக உள்ளது.
சென்னையில் நேற்றைவிட இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,294 பேர் உட்பட மொத்தம் 80 ஆயிரத்து 961 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 341 பேரும், தூத்துக்குடியில் 268 பேரும், செங்கல்பட்டில் 186 பேரும், திருநெல்வேலியில் 164 பேரும், காஞ்சிபுரத்தில் 163 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
**-கவிபிரியா**�,