tமானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

public

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று அதிகரித்துள்ளது.

அதன்படி மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ. 11.50 முதல் 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. டெல்லியில் ரூ.11.50 அதிகரித்து எல்பிஜி சிலிண்டர் ஒன்று ரூ.593க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 31.50 ரூபாய் அதிகரித்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் அதிகபட்சமாக 37 ரூபாய் அதிகரித்து 606.50 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனையாகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்திருப்பதால், சில்லறை விற்பனையிலும் விலை ஏற்றம் இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 761.59 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை மே மாதம் 569.50 ரூபாயாக குறைந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *