�
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு 700ஐ கடந்து வரும் நிலையில், இன்று 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர பாதிப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (மே 24) மாலை வெளியிட்டுள்ளது. இதில், வெளி மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட மொத்தம் 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 111 ஆக உள்ளது. இன்று மட்டும் 833 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,324 ஆகவுள்ளது. மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,839 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 11,441 பேர் உட்பட இதுவரை மொத்தம் 3,91,252 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 587 பேருக்கு உட்பட மொத்தம் 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகச் சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,