வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த மூன்று நாட்களாக நீடித்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்
டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. டெல்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடிய வும் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்களை அறிவிக்க வேண்டும் என்றும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல்வரும் துணை முதல்வரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதனிடையே வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
**கவிபிரியா**�,