ஓ.ராஜா மீண்டும் பதவியேற்பு!

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா இன்று (ஜனவரி 30) மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைப் பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அம்மாசி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓ.ராஜா மற்றும் 17 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்துசெய்தனர்.