�
கோவையில் என் வழி தனி வழி என்ற தலைப்பில் தமிழர்களின் பெருமையைக் கொண்டாடும் வகையில் இன்று (ஜனவரி 29) ஒரே இடத்தில் 500 கோலங்கள் கல்லூரி மாணவிகளால் வரையப்பட்டன.
ஒவ்வொரு நாளும் விடியலுக்கு முன்பாக தமிழகத்தில் கிராமங்கள், நகரங்களில் வாழும் பெண்கள் தங்களின் வீட்டு முன்பு கோலமிடுவது கலாச்சாரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. காலப்போக்கில் வீட்டின் முன்பு கோலமிடுவது என்பது குறைந்து வருகிறது. இன்றைய காலங்களில் பெரும்பாலான பெண்களுக்குக் கோலம் வரையத் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். அப்பார்ட்மெண்ட்களில் கலர் ஸ்டிக்கர் கோலங்கள் ஒட்டுவது ஃபேஷனாகிவிட்டது.
இந்நிலையில், தமிழர்களின் பெருமையை கொண்டாடும் வகையில் வடகோவையில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், ’என் வழி தமிழ் வழி’ என்ற தலைப்பில் கோலங்களை வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1000 மாணவிகள் கலந்து கொண்டு 500 கோலங்கள் வரைந்தனர்.
அதாவது ஒரே இடத்தில் ஒரு மணிநேரத்தில் 500 வகையான புள்ளி கோலங்களை வரைந்து ’ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி டாடா டீ சக்ரா கோல்ட் சார்பாக நடத்தப்பட்டுள்ளது.�,