Qநித்யானந்தா ஜாமீன் ரத்தாகுமா?

public

நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் போலீசார் ஒரு வாரத்தில் பதில் அளிக்கக் கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது 2010ல் பாலியல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று நித்தி வெளியே உள்ளார். பாலியல் வழக்குத் தொடர்பாகக் கடந்த 9 ஆண்டுகளாகக் கர்நாடக ராம் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் ராம்நகர நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலியல் வழக்கில் நித்தி 45 விசாரணைகளுக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார் லெனின் கருப்பன்.

இந்த மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இதுதொடர்பாக நித்தி பதில் அளிக்க ஆணை பிறப்பித்துள்ளார். நித்தியின் ஜாமீனை ரத்து செய்வது பற்றி கர்நாடக சிஐடி போலீஸ் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *