நானோவை கைவிடும் டாடா!

நானோ கார் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்-6 தரநிலைகளுக்கு ஏற்ப டாடா நானோவை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்ய வாய்ப்பில்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், நானோ காரின் உற்பத்தியையும், விற்பனையையும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் டாடா நிறுவனம் நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவரான மாயாங் பிரதீக் பேசுகையில், பி.எஸ்-6 தரநிலைகள் அமலுக்கு வந்தபிறகு நானோவுடன் மற்ற சில வாகனங்களின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். எனினும், எந்தெந்த வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.