உள்ளாட்சித் தேர்தல்: ஆணையத்துக்கு நோட்டீஸ்!


உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் கடந்த 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாகத் தடைப் பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உடனே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தி இருந்தார். 10 நாட்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கவும் வலியுறுத்தியிருந்தார்.