ஐடி ஊழியர்களுக்குப் பெருகும் வாய்ப்பு!


தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் பல உருவாகும் என்று இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் அல்லது பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களால் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தேசியத் தலைநகர் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும். இந்த நகரங்கள் தகவல் தொழில்நுட்ப அனுபவமுடைய ஊழியர்கள் பணியமர்த்துதலில் முன்னிலை வகிக்கும். தகவல் தொழில்நுட்ப அனுபவமுடைய ஊழியர்கள் பணியமர்த்துதல் சந்தையில் கர்நாடகா 1.05 பில்லியன் டாலர், மகாராஷ்டிரா 0.48 பில்லியன் டாலர், தேசியத் தலைநகர் பகுதி 0.23 பில்லியன் டாலர் என்ற மதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.