நேரடி வரி வசூல் அதிகரிப்பு!


நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் நேரடி வரி வசூல் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
201718 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 19.3 சதவிகித உயர்வுடன் நேரடி வரி வாயிலாக மொத்தம் ரூ.6.95 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டு முழுவதுக்குமான வரி வசூல் 18.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் தான் அரசின் வரி வருவாய் அதிகரித்து வருவதாகவும், இதன் வளர்ச்சி விகிதம் 14 முதல் 15 சதவிகிதமாக இருக்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.