வேலை நிறுத்தத்தில் மாற்றம் இல்லை!

க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்குனர்களை கண்டித்து, வருகிற மார்ச் ஒன்றாம் தேதி முதல், வேலை நிறுத்தம் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் க்யூப் மற்றும் யுஎஃப்ஒ நிறுவனங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாளத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து மார்ச் 1ஆம் தேதியிலிருந்து எந்தப் படத்தையும் வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்தது. மேலும் இது தொடர்பாக வரும் 16ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.