இந்தியக் கோழிகளுக்கு சவுதியில் தடை!

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக இந்தியாவிலிருந்து கோழி, இறைச்சி, முட்டை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோழி, முட்டை கோழி இறைச்சி ஆகியவை சவுதி அரேபியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலுள்ள தசரகள்ளி என்ற கிராமத்தில் ஒருவிதப் பறவைக் காய்ச்சல் நோயால் சில கோழிகள் இறந்துள்ளதாக உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. ஹெச்.5.என்.8. என்ற வைரசால் உருவாகும் பறவைக் காய்ச்சல் நோயால் கோழிகள் இறக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக கால்நடை சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.