பாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்!

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிதேந்திரா மீது அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேச டி.ஜி.பி-யிடம் நேற்று (பிப்ரவரி 7) அந்த பெண் அளித்துள்ள புகாரில், “1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம், எனக்கு 18 வயதிருக்கும் போது, 28 வயதான ஜிதேந்திரா சிம்லாவில் படப்பிடிப்புகாக வந்தபோது மதுபோதையில் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். எனது பெற்றோர் உயிரோடிருக்கும்போது இந்த புகாரை அளித்திருந்தால் அவர்கள் மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதால் இப்போது புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
75 வயதான ஜிதேந்திரா சுமார் 200 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பல படங்களையும், சீரியல்களையும் தயாரித்துவருகிறார். பாலிவுட்டில் பிரபலமான அவர் மீது எழுந்துள்ள இந்த புகார், பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.