பேச்சுவார்த்தைக்குத் தயார்: க்யூப் நிறுவனம்!

மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் க்யூப் நிறுவனம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.
திரையரங்கில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்பும் க்யூப், யூஎஃப்ஓ நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் தென்னிந்திய திரையுலகம் மார்ச் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.