தெலங்கானாவில் மூடப்படும் சிறைகள்!


தெலங்கானா மாநிலத்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஐந்து சப் ஜெயில்களை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் குற்றங்களில் ஈடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை டி.ஜி.பி வி.கே சிங், “தெலங்கானா மாநிலத்தில் மத்தியச் சிறைகள் தவிர்த்து 35 கிளைச்சிறைகள் (சப் ஜெயில்) செயல்பட்டு வருகின்றது. அர்மூர், போதன், வாரங்கால், நரசம்பேட், மதிரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிளைச் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால் அவற்றை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
10 அறைகள் கொண்ட அர்மூர் சிறையில் தற்போது வெறும் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். அதே போல் 17 அறைகள் கொண்ட போதன் சிறையிலும் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். அதே போல் மற்ற சிறைகளிலும் குறைவான கைதிகளே உள்ளதால் அவற்றை மூட முடிவு செய்துள்ளோம்.