குரங்கு கையில் பூ மாலை!


குரங்கு கையில் பூ மாலை போன்று இந்து கோவில்கள் அறநிலையத்துறையிடம் உள்ளதாக பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் தொடர்பான அறநிலையைத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இன்று(பிப்ரவரி 5) சென்றார்.