கப்பலில் வந்த கார்!


இந்தியாவிற்கு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII கார் சென்னைக்கு கப்பலில் வந்து இறங்கியது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் `2018 பாண்டம்' வகை காரின் 8வது ஜெனரேஷன் சென்னை பிஎம்டபிள்யூ கே.யூ.என். விற்பனை நிலையத்தை வந்தடைந்தது. இது குறித்து சென்னை பிஎம்டபிள்யூ கே.யூ.என் விற்பனை நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் பிப்ரவரி 22, 2018 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இது ‘Architecture of Luxury' என்ற தீமின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.