தொலைத் தொடர்பு மேம்பாட்டுக்கு நிதி!


இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் தாக்கலில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் தொடங்கும் 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தொலைத் தொடர்புத் துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அதில் அரசின் பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ’பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் சுமார் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் அதிவேக இணைய பைபர் கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.