விஜயகாந்த்- பிரேமலதா: மண நாள் கொண்டாட்டம்!


தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த்-மகளிரணித் தலைவர் பிரேமலதா தம்பதியரின் திருமண நாள் விழா இன்று (ஜனவரி 31) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விஜயகாந்தின் சினிமா வாழ்வில் மட்டுமல்லாது, அவரது அரசியல் வாழ்விலும் பிரேமலதாவின் பங்கு மிக முக்கியமானது. தவிர தேமுகவின் முக்கியமான பேச்சாளராகவும் இன்று பிரேமலதா விளங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று மண நாள் காணும் இந்த தம்பதியிடம் ஆசி பெற இன்று காலையில் இருந்தே தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னையில் இருக்கும் விஜயகாந்த் இல்லத்தில் குவிந்தனர். அவர்கள் மாலைகளுடன், பல்வேறு பரிசுப்பொருட்களுடனும், காவடி எடுத்தும் ஆடிப் பாடியும் வந்தனர்.