என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்: காம்பீர்


ஏலத்தில் என்னைத் தேர்வு செய்யாதீர்கள் என கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசனிற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், முக்கிய வீரர்களைச் சில அணிகள் தக்க வைத்துக்கொள்ளாமல் இருந்தது பெரும் வியப்பளித்தது. அதில் க்றிஸ் கெயில், சிம்மன்ஸ், கவுதம் காம்பீர், பிரெண்டன் மெக்குல்லம் போன்ற சில வீரர்களைச் குறிப்பிட்டு சொல்லலாம்.
அதில் கவுதம் காம்பீர் தொடர்ச்சியாக கொல்கத்தா அணியை கேப்டனாக சிறப்பாக வழிநடத்திவந்த நிலையில் அவரைத் தேர்வு செய்யாதது என் என்பது குறித்து அணி நிர்வாகத் தலைவர் வெங்கி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணி இந்த வருடம் ஏலத்திற்கு முன்பாக சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரோ ரசூல் இருவரையும் தக்கவைத்துக்கொண்டது. அதன் பின்னர் ‘ரைட் டு மேட்ச்’ வசதியைப் பயன்படுத்தி கவுதம் கம்பீரை கொல்கத்தா அணி திரும்ப பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராபின் உத்தப்பா மற்றும் பியூஸ் சாவ்லா இருவரை மட்டும் கொல்கத்தா அணி தேர்வு செய்தது. கவுதம் காம்பீரை ஏன் தேர்வு செய்யவில்லை என கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி வெங்கி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.