காந்தி நினைவு தினம்: தொழுநோய் விழிப்புணர்வு முகாம்!


தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை சைதாப்பேட்டையில் இன்று சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியடிகளின் 71ஆவது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்கள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தொழுநோய் விழிப்புணர்வு முகாம் இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.
இந்த முகாமைத் தொடங்கிவைத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தொழுநோயாளிகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் எனக் கூறினார்.