நேர்மையானவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும்!


மத்திய அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான சீர்திருத்தங்களால், நேர்மையாகக் கடன் பெறுபவர்களுக்கு பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறும் வழிமுறை எளிதாக இருக்கும் என நிதிச் சேவைகள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
வாராக் கடன் பிரச்னையில் தவித்து வரும் வங்கித் துறையை மீட்கும் பொருட்டு, இந்தியாவின் 20 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.88,139 மூலதனம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், அதிகளவில் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.250 கோடிக்கும் மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் அதுபற்றி கட்டாயம் அறிவிக்க வேண்டும் எனவும் அருண் ஜேட்லி கூறியிருந்தார். மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், அவை கடன் பெறும் வழிமுறை எளிதாக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.