லிம்கா சாதனை: 900 மாணவர்கள் பங்கேற்பு!


பொள்ளாச்சியில் லிம்கா சாதனை முயற்சிக்காக 900 மாணவர்கள் இணைந்து மூவர்ண குடைகளுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நேற்று(ஜனவரி 26) குடியரசு தின விழாவையொட்டி சர்க்கஸ் மைதானத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 900 பேர் இணைந்து "லிம்கா" சாதனைக்காக முயற்சியை மேற்கொண்டார்கள். இதில், 900 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மூவர்ண குடையுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள். ஐந்து நிமிடம் நடந்த இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.