ஆளுநர் தேநீர் விருந்து!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கொடியேற்றினர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏக்கள், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உட்பட பல்வேறு விஐபிக்கள் கலந்துகொண்டனர். இதில் நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி போன்றவையும் நடைபெற்றன.