மாணவனை தேசிய கொடி ஏற்ற செய்து கவுரவம்!


சாலையில் கிடந்த ரூ.21,000 பணத்தை தலைமையாசிரியர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த மாணவன், பள்ளியின் தேசியக் கொடியை ஏற்றச் செய்து கவுரவித்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் தாத்தையாவின் மகன் கிப்சன். இவர், வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி பள்ளிக்கு செல்லும்போது, சாலையில் 21 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கிடந்த பையை பார்த்துள்ளார். அதனை அவர் தனது பள்ளி தலைமை ஆசிரியர் பாஞ்சாட்சரத்திடம் ஒப்படைத்தார். அவர், அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.