காவல் ஆய்வாளர்களை பணிமாற்றம் செய்யக் கூடாது!

மணிராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில், காவல்நிலையங்களில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவல் ஆய்வாளர்களை பணிமாற்றம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருத்தல்,முறைகேடு புகார் போன்ற காரணங்களுக்காக காவல்துறையில் அடிக்கடி பணிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், திருபுவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று(ஜனவரி 25) மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருபுவனம் காவல் நிலையத்தில் 2 ஆண்டுகளில் 5 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள்,காவல் ஆய்வாளர்களை அடிக்கடி இடம் மாற்றினால் விசாரணை எப்படி நடைபெறும் என்று கேள்வி எழுப்பினர்.