வாக்கின் பலம் மகத்தானது: மோடி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி இந்திய வாக்காளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1950ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதன் இந்நாளின் பிரதான நோக்கமாகும். இந்நிலையில், இந்திய தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “ இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட இந்த நாள் நன்னாள் அதற்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும், குறிப்பிடும்படியாக இளைஞர்கள், இந்திய ஜனநாயகத்தினை வலுப்படுத்த தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.