உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாநிலங்கள்!


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு பிராந்திய மாநிலங்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்கும் என முன்னணி ஆலோசனை நிறுவனமான KPMG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து KPMG வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2035ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு ரூ.195 லட்சம் கோடியாக உயரும். அதில், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற கிழக்கு பிராந்திய மாநிலங்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்கும். இம்மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தின் பங்கு 39 சதவிகிதமாகவும், பீகாரின் பங்கு 18 சதவிகிதமாகவும், ஒடிசாவின் பங்கு 15 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.