ஊசி போட்டுக் கொலை செய்த செவிலியர்!


ஜெர்மனியில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுக் கொலை செய்ததாகச் செவிலியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்று வருகிறார்.
ஜெர்மனியில் ஆறு நோயாளிகளை ஊசி போட்டுக் கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நீல்ஸ் ஹொகல் என்ற செவிலியர்மீது மேலும் 97 கொலைகள் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெர்லின் மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராகப் பணியாற்றிவந்த நீல்ஸ், ஆறு நோயாளிகளுக்கு இதயத்துடிப்பை நிற்கச்செய்யும் வகையில் ஊசி போட்டு, அவர்கள் உயிருக்குப் போராடும்போது உதவுவது போல் நடித்து உறவினர்களிடம் பணம் பறித்துவந்தார்.