வருவாய் தரும் மூங்கில் விவசாயம்!


உயிர் மூலங்களிலிருந்து பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, மூங்கில்களை அதிகளவில் வளர்க்கும்படி விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும், இதனால் விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, வரோரா - வனி இடையேயான நான்கு வழித் தேசிய நெடுஞ்சாலையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் மூங்கில் வளர்ப்பு குறித்துப் பேசுகையில், “இப்பகுதிகளில் மூங்கில் விவசாயத்தைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு நாம் தான் ஊக்குவிக்க வேண்டும். மூங்கிலானது புல் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அவற்றை வளர்த்து வர்த்தகப் பயன்பாட்டுக்காக வெட்டுவதற்கு வனத் துறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறுவது போன்ற சிரமங்கள் விவசாயிகளுக்கு இருக்காது. இவற்றிலிருந்து பயோ எத்தனாலும் தயாரிக்க முடியும்” என்றார்.