இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் எல்லா துறைகளிலும் வளர்ச்சி காணப்பட்டுப் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவிகிதமாக உயரும் என்று சந்தா கோச்சர் கூறியுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சர், உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “முதல் அரையாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி மேலும் அதிகரித்து இரண்டாம் அரையாண்டில் 7 சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டுதல் (ஜிவிஏ) 6.1 சதவிகிதமாக உயரும்” என்றார்.