பணமதிப்பழிப்பைக் கெடுக்க முயற்சி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கெடுக்கப் பலர் முயற்சி செய்தும் மக்களின் பேராதரவால் வெற்றி பெற்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, ”ஊழலில் ஈடுபடுவதோடு அதை ஆதரிக்கும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பணமதிப்பழிப்பைக் கெடுக்க முயற்சி செய்தனர். அதன் பொருட்டு மக்களைக் கலவரம் செய்யத் தூண்டுதல், தீ எரிப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது எனப் பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல் பேர்வழிகள் மற்றும் நியாயமற்றவர்களைக் காப்பாற்றவே இத்தகைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.