ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர விபத்து: 4 பேர் பலி!


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த சிலர், இன்று (ஜனவரி 20) காலை வத்திராயிருப்பு செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் பயணம் செய்தனர். அந்த ஆட்டோ வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் காடநேரி விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே விருதுநகரிலிருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.