எரிபொருள் சிக்கனம்: சைக்கிளில் பேரணி!


தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் பொதுமக்கள் சிக்கனமாக இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.