பழைய உருக்கு இறக்குமதிக்கு அனுமதி!

மும்பை நவசேனா மற்றும் ஐ.சி.டி. துகல்காபாத் துறைமுகங்கள் வழியாகப் பழைய மற்றும் பழுதடைந்த உருக்கு (ஸ்டீல்) இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (டி.ஜி.எஃப்.டி.) மத்திய அரசின் உருக்கு அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மும்பை நவசேனா மற்றும் ஐ.சி.டி. துகல்காபாத் துறைமுகங்கள் வழியாகப் பழைய மற்றும் பழுதடைந்த உருக்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. ஏற்கெனவே மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய துறைமுகங்கள் வழியாகப் பழைய மற்றும் பழுதடைந்த உருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.