ரயில் கட்டணம் உயருமா?


பண்டிகை காலங்களில், ரயிலில் கீழ் படுக்கை கேட்பவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியத்துக்குக் கட்டணப் பரிந்துரைக் குழு பரிந்துரைத்துள்ளது.
விழாக்காலம் உள்ளிட்ட சீசன் நேரங்களில் இயக்கப்படும் பிரீமியம் ரயில்களில் ‘பிளக்சி பேர்’ என்றழைக்கப்படும் கட்டண முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல் விமானங்களில் முன் இருக்கைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓட்டல்களிலும் அதிக வசதி கொண்ட அறைகளுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, வசதிக்கேற்ற கட்டணம் என்ற அடிப்படையில் ரயில்களிலும் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, கட்டண மறு ஆய்வு கமிட்டியை ரயில்வே வாரியம் அமைத்தது. இந்த கமிட்டி மாறுபட்ட கட்டண முறையை அமல்படுத்தலாம் என ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.