வைரமுத்துவுக்கு ஆதரவாக தமிழ் படைப்பாளிகள்!


ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து வரும் நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக 36 படைப்பாளிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், மாலன், சா.கந்த சாமி, ச.தமிழ் செல்வன் உள்ளிட்ட 36 படைப்பாளிகள் ஒன்றிணைந்து வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும் மிரட்டலும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக கூறியுள்ளனர்.