கோமியம் சர்ச்சை: பிரகாஷ்ராஜ்


கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றுப் பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தமிழ், கன்னட திரைப்படங்களில் நடித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.கவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களைக் கூறி வருகிறார். காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ள கர்நாடகத்தில், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திர மடத்தில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து பிரகாஷ் ராஜ் பேசினார். இது பா.ஜ.க. இளைஞர் அணியினர் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப் பா.ஜ.க. இளைஞர் அமைப்பினர் முடிவு செய்து சிர்சி நகரப் பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர், விஷால் மராதே தலைமையில், மேடை உள்ளிட்ட பகுதிகள், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.
இது குறித்து பேசிய விஷால் மராதே, “தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர், எங்கள் வழிபாட்டுத் தலங்களை அசுத்தம் செய்கின்றனர். இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்